இந்தியாவுக்கு ஆயுத விற்பனை ஏன்?

வாஷிங்டன்: பல்வேறு நாடுகளுடனான ராணுவ ஒப்பந்தங்களை, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் நிர்வாகம், மறு ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவுடனான ராணுவ உறவு, ஒப்பந்தங்கள், மறு ஆய்வு செய்யப்படுமா என்ற கேள்விக்கு, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளதாவது:

இந்தியாவுக்கு இதுவரை, 1.45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, ராணுவ ஆயுதங்களை நாம் விற்றுள்ளோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அதை உறுதி செய்வதற்காகவே, அதி நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறோம்.உலகளாவிய, விரிவான ராணுவ ஒத்துழைப்பில், அமெரிக்காவின் உறுதியை நிலைநாட்டுவதாக இது அமைந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here