அதிமுகவுக்கு ஆப்பு!

-நடிகர் மயில்சாமி எடுத்த திடீர் முடிவு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தினம் தினம் அரசியல் கட்சிகள் அதிரடியாக வேட்பாளர்களை களமிறக்கி வருகின்றன. இந்நிலையில், சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்திருக்கிறார் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி. இன்று தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

நடிகர் மயில்சாமி சுயேச்சையாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு, காலை 11:20 மணிக்கு தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடையும் வரையில் அதிமுகவில் இருந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், அதிமுகவில் இருந்து வெளியேறினார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும், கொரோனா ஊரடங்கின் போதும் அந்த பகுதி மக்களுக்கு உணவு உள்பட பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமிக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here