கார் தீ பிடித்ததில் ஆடவர் பலி

ஈப்போ: வியாழக்கிழமை (ஏப்ரல் 15) இங்குள்ள பத்து கூராவ், ஜாலான் பாகன் செபராங் கம்போங் கோலா குலா என்ற இடத்தில் கார் தீப்பிடித்ததில் ஒருவர் தீக்கிரையாக்கப்பட்டார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் காலை 10.40 மணியளவில் அவர்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஒரு கருப்பு கார் 70%  தீயில் அழிந்ததிருந்ததை கண்டனர். பாதிக்கப்பட்டவர்  அப்பொழுதும் காரில் இருந்தார்.

பாதிக்கப்பட்டவர் அவரது குடும்பத்தினரால் 48 வயதான ஓங் யீன் டோங் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here