சுவிட்சர்லாந்து USB கிளையில் திருட்டு

 மர்மநபர்.. பணத்துடன் தப்பியோட்டம்..!!

சுவிட்சர்லாந்தில், மர்மநபர் ஒருவர் USB கிளையில், பல ஆயிரம் யூரோக்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள Römerhofplatz என்ற நகரில் இருக்கும் UBS கிளையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4:30 மணிக்கு முகமூடியுடன் ஒரு நபர் உள்ளே நுழைந்துள்ளார்.

அதன் பின்பு திடீரென்று கத்தியை காட்டி அங்குள்ள பணியாளர்களை மிரட்டியுள்ளார். இதில் பதறிய பணியாளர்கள் அப்படியே நின்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த நபர் பல ஆயிரம் யூரோ பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டார். எனவே சூரிச் நகர காவல் துறையினர் திருடிச் சென்ற அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். 

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here