கைகள் இல்லை என்பது தடையல்ல!
கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என காலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வாலிபர் தெரிவித்தார்.
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிறவியிலேயே கைகளை இழந்த பிரனவ், கால்களால் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார். ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றையும் செய்கிறார். இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ஆர்வமாக இருந்தார்.
ஆலத்தூர் பகுதியில் உள்ள சிறப்பு முகாமுக்கு பிரனவ் நேற்று தடுப்பூசி போடச் சென்றார். கைகள் இல்லாததால் தனக்கு காலில் தடுப்பூசி போடும்படி கேட்டுக்கொண்டார். இது பற்றி தடுப்பூசி முகாமில் இருந்த செவிலியர் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டனர்.
அவர்கள் கொரோனா தடுப்பூசியை கால்களில் செலுத்திக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினர். இதையடுத்து வாலிபர் பிரனவுக்கு செவிலியர் காலிலேயே தடுப்பூசி செலுத்தினர்.