கோவிட் பாதிப்பு 3,346 – குணமடைந்தோர் 3,052

சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,346 கோவிட் -19 தொற்றுகளை  பதிவு செய்துள்ளது. இது நேற்று 3,684 தொற்றுகளில் இருந்து குறைந்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,2,802,263 ஆக உள்ளது என்று சுகாதார தலைமை  இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 3,052 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,729,943 ஆக உள்ளது.

இதற்கிடையில், 204 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் (ICU) உள்ளனர். அவர்களில் 159 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்  மற்றும் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளில்95 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. அவர்களில் 64 பேருக்கு கோவிட்-19  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இன்று 3,079 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 2,941 மலேசியர்கள் மற்றும் 138 வெளிநாட்டவர்கள் மற்றும் 267 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகளாகும். இதில் 196 மலேசியர்கள் மற்றும் 71 வெளிநாட்டவர்கள் உள்ளனர். நோயறிதலின் போது 1.5% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுகள் என்று நூர் ஹிஷாம் கூறினார். இன்று மூன்று புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here