போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவன், மனைவி உட்பட மூவர் கைது!

அலோர் ஸ்டார், ஜனவரி 24 :

கடந்த புதன்கிழமை போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கணவன், மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து RM230,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.

கெடா காவல்துறை துணைத் தலைவர் டத்தோ முகமட் ரோஸ் ஷாரி கூறுகையில், நண்பகல் 12 மணியளவில் கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களினால் நடத்தப்பட்ட முதல் சோதனையில் 22 வயது இளைஞரை மெர்ஜிங் அடுக்குமாடிக் குடியிருப்பின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் கைது செய்தனர்.

அந்த நபரிடமிருந்த பையை சோதனை செய்ததில்,அதில் ஹெரோயின் வகை போதைப்பொருட்கள் அடங்கிய 8 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அடங்கிய வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது.

“போதைமருந்தின் எடை கிட்டத்தட்ட 56.23 கிராம் ஆகும். கோலக்கெட்டிலில் வசிக்கும் மற்றும் வியாபாரியாகப் பணிபுரியும் சந்தேக நபரின் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் அவர் மார்பின் வகை போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது,” என்று கெடா காவல்துறை தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

மேலும், அதே நாளில் மாலை 5 மணியளவில், சுங்கை பட்டாணி சாலை, சிம்பாங் எம்பாட் பகுதியில் ஒரு தம்பதியினர் ஓட்டிச் சென்ற மிட்சுபிஷி டிரைடன் பிக்கப் டிரக்கை தடுத்து, தமது பிரிவினரால் சோதனை நடத்தப்பட்டது.

கிளந்தானில் இருந்து வந்து விவசாயியாகப் பணிபுரியும் 40 வயதுடைய நபரை பரிசோதித்ததில், அந்த நபரின் இடுப்புப் பையில் 338.49 கிராம் எடையுள்ள ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது 37 வயதான மனைவியையும் மேலதிக விசாரணைக்காக போலீசார் காது செய்தனர்.

“கைதுசெய்யப்பட்ட ஆணின் ஆரம்ப சிறுநீர்சோதனையின் முடிவுகள் அவருக்கு மார்பின் வகை போதைப்பொருக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்தது, அதே நேரத்தில் அவரது மனைவி எதிர்மறையாக இருந்தார்,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கைத் தொடர்ந்து, சிக்கின் கம்பங் ராடெக்ஸில் உள்ள ஒரு வீட்டில் மூன்றாவது சோதனை நடத்தியதில், 5,504.59 கிராம் எடையுள்ள சியாபு வகை போதைப்பொருள்கள் அடங்கிய ஒன்பது வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளைக் கொண்ட ஒரு பையைக் கண்டுபிடித்ததாக முகமட் ரோஸ் கூறினார்.

அத்தோடு, 1,596.86 கிராம் எடையுடைய ஹெரோயின் அடங்கிய ஐந்து வெளிப்படையான பிளாஸ்டிக் பொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“அனைத்து வழக்குகளிலும் மொத்தமாக கைப்பற்றப்பட்டது 1,991.58 கிராம் ஹெரோயின் மற்றும் 5,504.59 கிராம் சியாபு என்பனவாகும். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு RM224,852 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து RM8,000 மதிப்புள்ள Yamaha 125Z மோட்டார் சைக்கிள் மற்றும் RM835 ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக முகமட் ரோஸ் கூறினார்.

“கைப்பற்றப்பட்ட இந்த போதைமருந்து சந்தையில் வெளியிடப்பட்டால், அதை 62,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும்.

“கிளாந்தான் மற்றும் பினாங்கு எல்லை மாநிலமான வெளி மாநிலங்களில் இருந்து இந்த போதைப்பொருள் விநியோகத்தை அவர்கள் பெற்றதாக நம்பப்படுகிறது.

“இரண்டாவது சந்தேக நபரான விவசாயி, இந்த நடவடிக்கையின் மூளையாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார், மேலும் அவருக்கு ஆறு முந்தைய போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

அபாயகரமான மருந்துகள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக முகமட் ரோஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here