பூலாவ் பெர்ஹெந்தியானில் மோசமான வானிலையால் சுமார் 400 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

கோல பெசூட், பிப்ரவரி 27:

மோசமான வானிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள பூலாவ் பெர்ஹெந்தியானில் 18 சிறுவர்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 385 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

பூலாவ் பெர்ஹெந்தியான் விடுதி வளாக சங்கத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் சே அப்துல்லா கூறுகையில், கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று ஆகியவை காரணமாக ரிசார்ட்டிக் படகு சேவை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

“சுற்றுலாப் பயணிகள் பூலாவ் பெர்ஹெந்தியானிலுள்ள 19 ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளில் தங்கியுள்ளனர்.

இறைவனின் கிருபையால், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நன்றாகவும் உள்ளனர்” கூறினார்.

மலேசிய கடல்சார் துறையிடம் அனுமதி கிடைத்தால், பூலாவ் பெர்ஹெந்தியானில் இன்று வானிலை சிறப்பாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் நாளை சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

“நாங்கள் வானிலை நிலைமையை சார்ந்தே இருக்கிறோம், நிலைமை இப்படியே இருந்தால், மலேசிய கடல் துறை அனுமதி கொடுத்தால், அவர்கள் நாளை சொந்த ஊருக்கு திரும்ப முடியும்.

“வானிலை மோசமாக தொடர்ந்தால், தீவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல மலேசிய கடல்சார் அமலாக்க துறையினரிடம் அல்லது கடல் காவல்துறையிடம் இருந்து பெரிய கப்பல்களைக் கேட்போம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here