ஒரு பகுதி நேர சமயப் போதகர் கடந்த மாதம் தெரெங்கானுவில் ஏற்பாடு செய்திருந்த சமய நிகழ்ச்சியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் பல சாட்சிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சாட்சிகள் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 61 வயதான சமய போதகர் படகு இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். தெரெங்கானு குற்றப் புலனாய்வுத் தலைவரான சுஃபியன் சுலைமான் சாட்சிகள் வழங்கும் தகவல் அடிப்படையில், போலீசார் தங்கள் விசாரணைக் கடிதத்தை முடிக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் தெரெங்கானுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆனால் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் போன்ற பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களின் அறிக்கையை பதிவு செய்வதற்காக நாங்கள் அவர்களைக் கண்காணிக்கிறோம்.
ஐந்து வயது சிறுமி தனது தந்தை மற்றும் பாட்டியுடன் நிகழ்வில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்குத் திரும்பிய பிறகு, சிறுமி தனது தாயிடம் படகு இல்லத்தில் சமய போதகருடனான சந்திப்பதைப் பற்றி கூறினார். இது குறித்து தாய் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் சந்தேக நபரை கைது செய்தனர்.