வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு – சரவணன்

தாப்பா, ஜூன் 7 :

மூன்று நாடுகளில் இருந்து வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்துவது தொடர்பான பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என மனிதவளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

இறுதிக் கட்ட செயல்முறை நடைபெற்று வருவதாகவும், அதில் தொழில்நுட்ப விஷயங்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளின் முகவர் அல்லது கட்சிகளுக்கிடையில் உடன்படிக்கைகள் கையெழுத்திடுதல் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளுக்காக 200,000 க்கும் மேற்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை அமைச்சகம் பெற்றுள்ளது.

“இந்தோனேசியாவில் இருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது மனிதவள அமைச்சகம் மற்றும் அண்டை நாட்டில் உள்ள சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு இடையேயான நடைமுறைகளை உள்ளடக்கியது.

“வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட செயல்முறையும் முடிந்துவிட்டது.

ஆனால் கம்போடியாவிலிருந்து முஸ்லீம் பணிப்பெண்களை அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்தை மலேசியா இன்னும் உறுதி செய்யவில்லை என்றார்.

“தான் ஜூலை மாதம் கம்போடியா செல்வதாகவும், பெரும்பாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு பெறமுடியும் என்றும் இந்தோனேசியாவைத் தவிர, கம்போடியாவில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான வீட்டு உதவியாளர்கள் உள்ளனர், ”என்று அவர் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here