கோலாலம்பூர், ஜூன் 7 :
மனைவியை நாற்காலியால் தாக்கிய ஆடவருக்கு மாவட்ட நீதிமன்றம் 5 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, இந்தான் பைதுரி கெப்போங், ஜாலான் தாமானில் உள்ள ஒரு PPR குடியிருப்பில், பாதிக்கப்பட்ட எல்.சூரியா மாலா (44) என்பவருக்கு தலையில் நாற்காலியால் தாக்கியதன் மூலம் காயம் ஏற்படுத்தியதாக ஏ.ராமசாமி, 48, என்பவர் மீது குற்றஞ்சாடடப்பட்டது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி ஐனா அசாஹ்ரா அரிஃபின் இத்தண்டனை விதித்தார்.
அவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும், மேலும் அதே குறியீட்டின் பிரிவு 326A உடன் சேர்த்து படிப்பின் , இது அதிகபட்ச காலவரையறை அல்லது இரண்டு மடங்கு சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்குகிறது.
கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாள் முதல், நான்கு குழந்தைகளின் தந்தையான ராமசாமிக்கு சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பு விண்ணப்பத்தில், உணவு விநியோக துறையில் பணிபுரியும் ராமசாமி, மாதம் 1,700 வெள்ளி சம்பாதிப்பதாகவும், அதனை வைத்தே தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை பராமரிக்க வேண்டியிருப்பதாலும், குறைந்தபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று முறையிடப்பட்டது.
மாறாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு பாடமாக அமைய, தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் அமலினா ஜோஹர் விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.