மலாக்கா, ஜூலை 3 :
மலாக்கா சென்ட்ரல் அருகே லெபுஹ் அலோர் காஜா-மலாக்கா தெங்கா-ஜாசின் (AMJ) சாலையில், நேற்று நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், துணை ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நோர்டின் முகமட் யூசோப் (39) என்பவரே, பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா கான்சில், மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ், பெரோடுவா ஆக்ஸியா மற்றும் பெரோடுவா அல்சா ஆகிய கார் விபத்துக்குள்ளானதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முன்னர், பாதிக்கப்பட்டவர் புக்கிட் பலா போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில் இருந்து மலாக்கா சென்ட்ரல் நோக்கி செல்லும் வழியில் வாகனம் ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது.
“விசாரணையின் அடிப்படையில், ஜவுளிக் கடையின் முன்பகுதி வழியாகச் சென்றபோது, பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில் காத்திருந்த 33 வயது நபர் ஓட்டி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
“மோதலின் விளைவாக, சம்பந்தப்பட்ட வாகனம் அதற்கு முன்னால் இருந்த மற்ற இரண்டு கார்களுடன் அதாவது பெரோடுவா ஆக்ஸியா மற்றும் பெரோடுவா அல்சா ஆகிய கார்களை மோதியது, ” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மலாக்கா மாநில செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஆறு உறுப்பினர்களுடன் மத்திய மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அவர்கள் கவிழ்ந்த காரின் முன் இருக்கையில் சிக்கிக் கொண்ட பாதிக்கப்பட்டவரை அகற்ரியதாகவும் அவர் தெரிவித்தார்.