குளத்தில் குளிக்க சென்ற 6 பேரில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்

கோலா நெருஸ், பண்டார் பாரு கோல நேரஸில் உள்ள குளத்தில் ஆறு மாணவர்கள் குளிக்க சென்றபோது  அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

இச்சம்பவத்தில், கம்போங் பரோஹ் பாடாங் நன்னாஸ், பத்து ராகிட் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஆசிப் டேனிஷ் அப்துல் அஜீஸ் 13 உயிரிழந்த நிலையில் அவரது நண்பர்கள் ஐவர் உயிர் பிழைத்தனர்.

கோலா நெருஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவரும் ஆபரேஷன்ஸ் கமாண்டர் அஸ்மி உமர் கூறுகையில், மாலை 5.59 மணிக்கு சம்பவம் குறித்த புகாரைப் பெற்ற பின்னர் மொத்தம் 11 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

இடத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்டவர் நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் உறுப்பினர்கள் தேட தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் சடலம் மாலை 6.50 மணியளவில்  மீட்கப்பட்டதாக இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். மேலதிக நடவடிக்கைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அஸ்மி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here