தேசிய முன்னணி (BN) அடுத்த பொதுத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி உச்ச மன்ற கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்று தி ஸ்டார் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அம்னோ உச்சமன்ற கூட்டத்திற்கு ஒரு நாள் கழித்து கூட்டம் நடைபெறும் நம்பதகுந்த ஆதாரங்கள் கூறியதாக அந்த நாளிதழ் மேற்கோள் காட்டியிருந்தது.
தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர், இந்த சந்திப்பு குறித்து அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வ அழைப்புகள் இன்னும் அனுப்பப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
தற்போது நாடு தழுவிய சுற்றுப்பயணத்தில் இருக்கும் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசானின் கருத்துக்களும் கூட்டத்தில் கேட்கப்படும்.