நாசிக் கண்டார் உணவகம் முன் சண்டையிட்ட 3 பேருக்கு RM1,000 அபராதம்

புக்கிட் மெர்தாஜாம், ஆகஸ்ட் 18 :

கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறை, தாமான் சாய் லெங்கில் உள்ள நாசிக் கண்டார் உணவகத்தின் முன் சண்டையில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று ஆண்களுக்கு, தலா RM1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் டான் செங் சான் கூறுகையில், புக்கிட் மெர்தாஜாம் மாவட்ட நீதிமன்றத்தில் 3 பேரும் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றவியல் சட்டத்தின் 160வது பிரிவின்படி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டபின்னர், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட 15 உள்ளூர் ஆண்களை போலீசார் முன்பு கைது செய்தனர், ஆனால் மூன்று சந்தேக நபர்கள் மீது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர், மீதமுள்ளவர்கள் வளாகத்தில் சண்டையில் ஈடுபடாததால் விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபரைக் கண்டறிவதற்கான விசாரணைகளையும் போலீசார் மேற்கொண்டு வருவதாகவும், அவர்களில் சிலர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10 அன்று, 23 வினாடிகள், 22 வினாடிகள், 17 வினாடிகள் மற்றும் எட்டு வினாடிகள் நீடிக்கும் நான்கு வீடியோ பதிவுகள் தாமான் சாயில் உள்ள நாசிக் கண்டார் உணவகத்தின் முன் ஆண்கள் குழு ஒன்று சண்டையிடுவதைக் காட்டும் வீடியோ பதிவுகள் முகநூலில் வெளியாகியிருந்தன.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் உண்மையான சம்பவம் நடந்ததாக காவல்துறையின் விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில், ஒருவரையொருவர் தாக்குவதற்கு பல பொருட்களை ஆயுதங்களாகப் பயன்படுத்திக் கொண்ட குழு கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here