சிபு:, ஆகஸ்ட் 26:
இகன் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து, 25 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
பாலத்தில் இருந்து தனது காரை எடுக்குமாறு தன்னிடம் கூறியதாக அந்த நபரின் இளைய சகோதரர் போலீசில் புகார் செய்தார்.
24 வயதான அவர் புதன்கிழமை (ஆகஸ்ட் 24) சுமார் 10 மணியளவில் போலீசில் அறிக்கை செய்ததாக சிபு மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் சுல்கிப்லி சுஹைலி கூறினார்.
“அந்த பாலத்திற்கு அந்த நபரின் இளைய சகோதரர் வந்தபோது, தனது சகோதரனின் காரைப் பார்த்தார் என்றும் அந்த இளைஞன் பாலத்தில் இருந்து விழுந்துவிட்டதாக போலீசார் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
அந்த ஆடவரைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 084-217901 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறும் கூறினார்.