பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட 9 பேர் கைது

புக்கிட் மெர்தஜாம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) புக்கிட் தெங்காவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் தனிநபர்கள் குழுவுடன் நடந்த சண்டை தொடர்பாக விசாரணைக்காக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். செபராங் பெராய் தெங்கா (SPT) மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி டான் செங் சான் கூறுகையில், அதிகாலை 1.43 மணியளவில் நடந்த சண்டையில் சில நபர்கள் காயமடைந்தனர் என்பது குறித்து காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை எளிதாக்குவதற்காக உள்ளூர்வாசிகளான 17 முதல் 32 வயதுக்குட்பட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். மேலும் காயமடைந்தவர்கள் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர்கள் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும், கலவரத்தில் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 148ஆவது பிரிவின்படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here