சிறைத்துறை அனுமதித்தால் நஜிப் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கலாம்

சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக் இன்னும் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார் என்று மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ அசார் அசிஸான் ஹாருன் (படம்) தெரிவித்தார்.

இருப்பினும், மக்களவை அமர்வில் பங்கேற்க நஜிப்புக்கு (பிஎன்-பெக்கான்) அனுமதி வழங்குவது சிறைத் துறையின் பொறுப்பாகும் என்று மலேசியாகினி  செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் மக்களவைக்கு  வர முடியுமா என்று கேட்ட முகமது ஹனிபா மைதினுக்கு (பக்காத்தான் ஹராப்பான்-சேபாங்) அஹார் பதிலளித்தார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் ஃபெடரல் நீதிமன்றம் தனது தண்டனையை உறுதி செய்ததை அடுத்து நஜிப் 12 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here