பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 18 :
கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒட்டி மற்றும் பின்னிருக்கை பயணி ஆகிய இருவர் காயமடைந்தனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) நண்பகல் ஜாலான் உலு லங்காட்டில் ஏற்பட்டது என்றார்.
“ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இடையே ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் ஓட்டி 20 அடி பள்ளத்தாக்கில் தூக்கி எறியப்பட்டார், அதே நேரத்தில் பின்னிருக்கை பயணி பலத்த காயமடைந்தார்,” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தின் போது பின்னிருக்கை பயணி சீருடையில் இருந்ததால், அவர் மக்கள் தன்னார்வப் படையின் (ரேலா) உறுப்பினர் என்று நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இருவரும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.