சட்டவிரோத கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் (ஆலோங்) கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது

இஸ்கந்தர் புத்திரி, அக்டோபர் 19 :

நேற்று போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனையில், சட்டவிரோத கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் (ஆலோங்) கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக, ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்துள்ளார்.

உளவுத் தகவல்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் 23 முதல் 41 வயதுடைய உள்ளூர் ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.

இந்த குழு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும், இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம், ஜோகூர் நகரம் மற்றும் குளுவாங் மாவட்டத்தில் 18 வர்ணம் தெறித்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குகள் மற்றும் பேராக்கின் பெர்சாமில் ஒரு வழக்கு என 19 வழக்குகளை போலீசார் தீர்க்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.

“சமூக ஊடக தளமான Facebook மூலம் கடன் சலுகைகளை விளம்பரப்படுத்தி, அதன் மூலம் வாடிக்கையாளரை கவருவதே அவர்களின் செயல்பாடாகும்.

மேலும் கடன் வாங்கியவர்கள் வாரந்தோறும் பணம் செலுத்த வேண்டும், அவர்கள் தவறினால், அந்தக் கும்பல் மிரட்டல் நோக்கத்திற்காக குற்றவியல் அச்சுறுத்தல்களை செய்வார்கள், பின்னர் அதிக வட்டி விகிதத்தை வசூலிப்பதன் மூலம் கடன் வாங்கியவரின் குடும்பத்தை துன்புறுத்துவார்கள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here