பந்திங்கில் உள்ள ஜாலான் காஞ்சோங் பகுதியில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்தனர். திங்கள்கிழமை (அக்டோபர் 24) மதியம் 2.48 மணியளவில் இரண்டு கார்களும் தொழிற்சாலை அருகே விபத்துக்குள்ளானதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் தெரிவித்தார்.
இரு வாகனங்களும் தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை ஏற்றிச் சென்றன. திங்கள்கிழமை (அக் 24) தொடர்பு கொண்டபோது, பாதிக்கப்பட்ட பெண் தனது வாகனத்தில் சிக்கிக் கொண்டார் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேரும் சிகிச்சைக்காக பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







