பிரதமர் வேட்பாளர்களிடையே விவாதமா? தேவையற்றது என்கிறார் இஸ்மாயில்

 15ஆவது பொதுத் தேர்தலில் (GE15) போட்டியிடும் பிரதமர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் சாத்தியமில்லை என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகிறார். விவாதங்களால்  எதையும் சாதிக்க முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (அக். 26) புக்கிட் அமானில் தேர்தல்கள் மற்றும் சாத்தியமான வெள்ளத்தை எதிர்கொள்ளும் ஏற்பாடுகள் குறித்த காவல்துறையின் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், “விவாதம் செய்வது எங்கள் கலாச்சாரம் அல்ல” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களுக்கு இடையே பகிரங்க விவாதம் நடத்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்வைத்த முன்மொழிவு குறித்து அம்னோ துணைத் தலைவர் கருத்து தெரிவித்தார்.

“ஒரு விவாதம் நடத்தப்பட்டால், அது அவருக்கு (அன்வாருக்கு) அவரது தேர்தல் அறிக்கை மற்றும் அவரது வாக்குறுதிகளை வெளிப்படுத்த ஒரு மேடையை வழங்கும். அனைவரும் அவரவர் தொகுதிகளில் தேர்தல் பணியில் இருப்பதால் விவாதம் தேவையில்லை என்றார்.

பிகேஆர் தலைவரான அன்வார், பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களுக்கு இடையே வெளிப்படையான மற்றும் நேர்மறையான விவாதத்தை முன்மொழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இன அல்லது மத விஷயங்கள் அல்ல கொள்கைகள் பற்றிய கலந்துரையாடலை மேற்கொள்ள இது செய்யப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here