இளம் தலைமுறையினர் விளையாட்டை ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சாவியாக பார்க்க வேண்டும் என்கிறார் டாக்டர் வீ

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 29 :

இளம் தலைமுறையினர் விளையாட்டை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சாவியாக பார்க்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

“விளையாட்டு என்பது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகும், இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், பலனளிக்கும் சிறந்த வாழ்க்கையையும் தருகிறது” என்று MCA தலைவர் இன்று சனிக்கிழமை (அக். 29) பத்து பஹாட் தேசிய விளையாட்டு தினத்தைத் ஆரம்பித்து வைத்தபோது கூறினார்.

நாட்டிற்கு நல்ல பெயரைக் கொண்டு வருவதைத் தவிர, விளையாட்டு பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கிறது என்றும், இந்த துறையில் அதிக விழிப்புணர்வு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here