சுங்கை மூவார் ஆற்றில் வெள்ளம்; சிகாமட்டில் 17 பேர் வெளியேற்றப்பட்டனர்

ஜோகூர் பாரு, சுங்கை மூவார் ஆற்றில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடியதால், சிகாமட்டில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிகாமாட் பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் ஹஸ்ரின் கமல் ஹாஷிம் கூறுகையில், இன்று காலை 8 மணியளவில் கம்போங் பத்து பாடாக் சமூகக் கூடத்தில் உள்ள நிவாரண மையத்திற்கு 17 பேர் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் கம்போங் செபெராங், பத்து பாடாக் மற்றும் கம்போங் பத்து 5 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார். மதியம் வரை வெள்ளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யவில்லை. இருப்பினும் நெகிரி செம்பிலானில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சுங்கை மூவார் நிரம்பி வழிகிறது மற்றும் அருகிலுள்ள சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன  என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here