பந்திங், நவம்பர் 10 :
வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் 6,010 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா முகமட் ஹாருன் தெரிவித்தார்.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், சமூக நலத் துறை (ஜேகேஎம்) மூலம் அனுப்பப்பட வேண்டிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும், நாடு முழுவதும் உள்ள பேரிடர் சேமிப்புக் கிடங்குகளில் தயாராக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
“எனவே, எதிர்காலத்திலும், வாக்குப்பதிவு நாளிலும் பெரிய வெள்ளம் ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்வோம்,” என்று, அவர் நேற்று இரவு நடந்த தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.