புத்ராஜெயா: மக்கள் வாக்களிக்க தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதை எளிதாக்கும் வகையில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளை பொது விடுமுறை தினங்களாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி அறிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் நடந்த கியூபெக்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர், “மலேசிய குடும்பங்கள் வாக்களிப்பதை எளிதாக்குவதற்காக நவம்பர் 18 மற்றும் 19 வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை பொது விடுமுறை தினங்களாக அரசாங்கம் அமைத்துள்ளது. அனைத்து மலேசியர்களும் வாக்களிக்க வெளியே செல்வதை உறுதி செய்வதற்காக இது உருவாக்கப்பட்டது என்றார்.