நான்கு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

நான்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) காலை  முதல் இடியுடன் கூடிய  கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரித்துள்ளது.  தென்மேற்கு, வடகிழக்கு மற்றும் வடக்கு செபராங் பெராய் மாவட்டங்களை உள்ளடக்கிய பினாங்கும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும்.

சிலாங்கூரில், குவாலா லங்காட் மற்றும் செபாங் பகுதிகளுக்கும், நெகிரி செம்பிலானில், போர்ட் டிக்சன் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும், மெலாக்காவில் அலோர் காஜா மற்றும் மெலக்கா தெங்கா மாவட்டங்களுக்கும்  கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here