தெங்கு ஜஃப்ருல் கத்தாரில் இருப்பதால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை

தெங்கு ஜப்ருல்

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் பங்கேற்கவில்லை.

பெரித்தா ஹரியானின் கூற்றுப்படி, பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தெங்கு ஜஃப்ருல் கத்தாரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பதாகக் கூறினார். ஆனால் அது குறித்து விரிவாக விளக்கமளிக்கவில்லை.

இன்று காலை புத்ராஜெயாவில் காலை 10 மணிக்கு தொடங்கிய சிறப்புக் கூட்டத்தின் போது அன்வார் தனது அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டதாக பெர்னாமா தெரிவித்திருந்தது.

இரண்டு துணைப் பிரதமர்கள் மற்றும் 28 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை வரிசை, நிதியமைச்சராக இருக்கும் பிரதமரால் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here