RM7 பில்லியன் வெள்ள நிவாரணத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

7 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான  வெள்ளத் தணிப்பு திட்டங்கள் பல மதிப்பாய்வு செய்யப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.  நிதியமைச்சராக இருக்கும் அன்வார், நேரடி பேச்சுவார்த்தை மூலம் திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில்  முதலீடுகளை ஈர்க்கவும், நம்பிக்கையை மீட்டெடுக்கவும் புதிய மற்றும் சாதகமான சூழலை வழங்குவதில் தனது அரசாங்கம்  கவனமாக செயல்படும்  என்றார்.  நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து,  மார்ச் மாதம், இஸ்மாயில் சப்ரி யாக்கோபின் அரசாங்கம்          வெள்ளத் தணிப்பு திட்டங்களுக்காக RM15 பில்லியன் கூடுதலாக அறிவித்தது    குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், 12வது மலேசியத் திட்டத்தின் (2021-2025) கீழ் வெள்ளத் தணிப்பு திட்டங்களுக்காக RM1 பில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக இஸ்மாயில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here