ஆற்றில் மூழ்கிய 12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

கோத்த கினபாலு: வியாழன் (டிச. 15) தவாவ் ஆற்றில் விழுந்து மூழ்கி இறந்த 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

முகமட் ரஃபிசல் அப்துல்லாவின் உடல் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 50 மீ தொலைவில் Sungai Kebun JKK Kalabakan தவாவ் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் காணாமல் போனது குறித்த முதற்கட்ட அறிக்கை இரவு 8.07 மணிக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து கலாபக்கான் தன்னார்வக் குழுவினரால் தவாவ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இரவு 8.30 மணியளவில் தன்னார்வக் குழுவினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்களால் உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டது. அவரது சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இரவு 8.50 மணிக்கு முடிந்தது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here