பத்தாங் காலி, கோஹ்டாங் ராயாவில் உள்ள The Father’s Organic Farm campsite பண்ணை முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், மீதமுள்ள ஒன்பது பேரை தேடும் நடவடிக்கை நள்ளிரவில் நிறுத்தப்பட்ட பின்னர், இன்று காலை 8.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
இன்று ஐந்தாவது நாளாக தொடரும் இந்த நடவடிக்கையில், K9- நாய்கள் மூலம் கண்டறியும் பிரிவில் இருந்து மோப்ப நாய்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் சொத்துக்கள் இந்த தேடல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர், ஒன்பது பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர் மற்றும் 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.