சித்தியவான்:
ஜாலான் பெக்கான் கர்னியில் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார், அவரது சகோதரி பலத்த காயமடைந்தார்.
பின்னிருக்கை பயணியான முகமட் அஸ்மான் பைசல், 20, என்ற வாலிபர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் என்றும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அவரது சகோதரி, சித்தி நோராசுலினா, 26, பலத்த காயமடைந்து, ஸ்ரீ மாஞ்சாங் மருத்துவமனையில் (HSM) சிகிச்சை பெற்றார்.
33 வயதுடைய நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்து உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்று சித்தியவான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், மூத்த துணை தீயணைப்பு கண்காணிப்பாளர், முகமட் அசிசி ஜகாரியா தெரிவித்தார்.
“பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் அகற்றப்பட்டார், என்றும் அவர் ஆரம்ப சிகிசசைக்கு பின்னர் ஸ்ரீ மாஞ்சாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
அவரின் கூற்றுப்படி, இறந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மீட்பு நடவடிக்கை நள்ளிரவு 1.47 மணியளவில் முடிவடைந்தது என்றார்.