குவாந்தான்:
தனது நண்பர்களுடன் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது என்று, குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் வான் முகமட் ஜஹாரி வான் புசு கூறினார்.
சம்பவம் குறித்து நண்பகல் 1.45 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், பாதிக்கப்பட்டவர் சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனைச் சேர்ந்த ஆடாம் ரிதுவான் அப்துல் ரெஜாப், 18, என்று அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறித்த மாணவர் தனது 19 நண்பர்களுடன் சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார் என்றும், பாதிக்கப்பட்டவரின் நண்பரின் கூற்றுப்படி, மாணவர்கள் குழுவானது கடலில் குளிக்கும்போது உயரமான அலைகளால் தாக்கப்பட்டனர், கடலில் ஏற்பட்ட உயரலைகள் குழுவினரை பிரித்தது. பாதிக்கப்பட்டவர் காணாமல் போவதற்கு முன்பு வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது, ”என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
தற்போது பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன், மாணவர் காணாமல் போனதாக கூறப்படும் இடத்தில் தேடுதல் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.