இன்று (ஜனவரி 10) தொடங்கி வியாழன் (ஜனவரி 12) வரையான மூன்று நாட்களுக்கு குறிப்பிட்ட போக்குவரத்து சம்மன்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
ஜாலான் துன் எச்எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) அதிகாரப் பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும் MyBayar செயலி மூலமாக அபராதத்தை செலுத்த விரும்புவோர், குறித்த போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு வந்து, அங்குள்ள barcode டினை ஸ்கான் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.