சிலாங்கூர் சுல்தான் தம்பதியினரின் சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா மற்றும் அவரது துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் இன்று சீனப் புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

“இந்த ஆண்டு நம் அனைவருக்கும் செழிப்பு, மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம்” என்றும்,” இந்த முயல் புத்தாண்டை நல்லெண்ணம், சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதையுடன் கொண்டாட வேண்டும்” என்று, சிலாங்கூர் அரச அலுவலக முகநூல் மூலம் பதிவிட்ட சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here