நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியது

இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 12,090 பேர் அங்குள்ள நான்கு மாநிலங்களில் இயங்கிவரும் 84 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சபா மாநிலத்தில் 2,412 குடும்பங்களைச் சேர்ந்த 6,843 பேர் அங்குள்ள 29 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) செயலகம் தெரிவித்துள்ளது.

ஜோகூரில் மொத்தம் 4,868 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பகாங்கில் 323 பேரும், சரவாக்கில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here