கூட்டணியில் கட்சிகளில் சேர விருப்பம் தெரிவித்த முன்னாள் அம்னோ உறுப்பினர்களை ஏற்பதா என்பதை பக்காத்தான் ஹராப்பான் (PH) இன்னும் முடிவு செய்யவில்லை என்று PH தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த விவகாரம் விரைவில் அம்னோ தலைவர்களுடன் விவாதிக்கப்படும் என்றார்.மெஎங்களுடன் சேர விருப்பம் தெரிவித்த சில முன்னாள் அம்னோ உறுப்பினர்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அம்னோ தலைவர்களுடன் நாங்கள் விவாதிப்போம் என்று இன்று பிகேஆர் மத்திய தலைமைக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
கடந்த நவம்பரில் 15ஆவது பொதுத் தேர்தலின் போது செய்த குற்றங்களுக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உட்பட 44 உறுப்பினர்களை ஜனவரி 27 அன்று அம்னோ பதவி நீக்கம் செய்தது.