5 ரிங்கிட்டிற்கும் குறைவான விலையில் விற்கப்படும் மெனு ரஹ்மா உணவுத் திட்டம் மூன்று மாதங்கள் மட்டுமே நீடிக்கும் தற்காலிக திட்டமில்லை. மாறாக, மக்கள் நலனைத் தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் அத்திட்டம் தொடரப்படும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ ஶ்ரீ சலாஹுடின் அயூப் தெரிவித்தார்.
மலேசியர்கள் யாரும் பட்டினி கிடக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்த அணுகுமுறையை அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
“நம் நாடு மற்றும் மக்களுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தை தொழில்துறையினர் தொடருவார்கள் என்றும், தற்போது உணவுத் துறையில் மட்டுமின்றி கார்ப்பரேட் மற்றும் வங்கித் துறைகளையும் ஈடுபடுத்தும் வகையில் ரஹ்மா திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது,” என்றும் சலாஹுடின் கூறினார்.