சுமார் 15 நாட்களுக்கும் மேலாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட 16 வயது சிறுமி, ஜாசினில் உள்ள தாமான் மாஜூவில் உள்ள தனது குடும்பத்தினருடன் மீண்டும் வந்து இணைந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 5) பிற்பகல் 3.30 மணியளவில், பேராக்கின் கம்பாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது ஆண் நண்பருடன் குறித்த சிறுமி பாதுகாப்பாக காணப்பட்டார் என்று, ஜாசின் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் அஹ்மட் ஜமீல் ரட்ஸி கூறினார்.
கடந்த மார்ச் 18 முதல் தனது வீட்டை விட்டு வெளியேறி, தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்ததாக சிறுமி ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார். மேலும் குறித்த நபரால் தான் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் தவறாக நடத்தப்படவில்லை என்றும் அந்த சிறுமி கூறியதாக அவர் கூறினார்.
“இருப்பினும், போலீசார் பல கோணங்களில் விசாரணையை முன்னெடுப்பார்கள் என்று கூறிய அவர், மார்ச் 27 அன்று, நாசி லெமாக் விற்பனையாளர், 41, ஒருவர் காணமல் போன தனது பதின்ம வயது மகளைத் தேடி, உள்ளூர் மக்களுக்கு சுவரொட்டிகளை விநியோகித்ததாகவும் அறியமுடிகிறது.
படிவம் 4 மாணவியான குறித்த சிறுமி, தனது கைத்தொலைபேசி உட்பட அனைத்து பொருட்களையும் வீட்டில் வைத்துவிட்டு சென்றதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தபோது கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.