நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 21) காஜாங்கில் உள்ள பண்டார் பாரு பாங்கியில் நடந்த ஒரு சம்பவத்தில், போலீசாரைத் தவிர்க்க ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று நண்பகல் 12.30 மணியளவில், ஜாலான் பெர்சியாரன் பண்டார் பாரு பாங்கியில் வைத்து, குறித்த வாகனத்தை ஓட்டிய பெண், 26, மற்றும் ஒரு ஆண் பயணி, 38, ஆகியோரை கைது செய்தாக, காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைத் ஹாசன் கூறினார்.
அவர்களின் வாகனத்தை சோதனை செய்ததில் 2.1 கிராம் மெத்தம்பேட்டமைன் என நம்பப்படும் பதப்படுத்தப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
“ஓட்டுநர் மற்றும் பயணி ஆகிய இருவரும் போதைப்பொருள் சோதனையில் மெத்தாம்பேட்டமைன் பாவித்திருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அவர்களுக்கு எதிராக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான முன் பதிவுகள் உள்ளன,” என்று அவர் இன்று (மே 22) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இருவரும் மே 24 வரை மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 186, ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 12(3) மற்றும் 15(1)(a) மற்றும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42(1) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.