வேறொருவருடன் மனைவி தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, ஒரு நபர் கும்பலால் தாக்கப்பட்டார். ஜனவரி 22 ஆம் தேதி அம்பாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
காலை 10.15 மணியளவில் சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை தாக்கினர். இதனால் மூக்கில் இரத்தம் வழிந்தது. பின்னர் அவர் அருகில் உள்ள கொட்டகைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் சுயநினைவை இழக்கும் வரை மீண்டும் தாக்கப்பட்டார் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்னும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் நண்பரால் போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து, ஜன. 26 மற்றும் ஜன. 27 ஆகிய தேதிகளில் போலீசார் தொடர் கைதுகளை மேற்கொண்டனர். 22 முதல் 32 வயதுடைய மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட பெண்களில் ஒருவர் சந்தேகத்திற்குரிய நபரின் மனைவி. ஐந்து சந்தேக நபர்களுக்கும் ஒருவரையொருவர் தெரியும். கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் தாக்குதலின் போது உடனிருந்தனர் மற்றும் சம்பவத்தை பதிவு செய்திருந்தனர்.
ஆண் சந்தேக நபர்களில் ஒருவருக்கு 9 குற்றப் பதிவுகள் உள்ளன. மேலும் அவர் தற்போது அதிகாரிகளால் தேடப்படும் நபராவார். மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக அவர் கூறினார்.