ஆட்டிஸம் சிறுவன் ஜெய்ன் ரய்யான் கொலை வழக்கு: விசாரிக்க போலீசாருக்கு அவகாசம் தருவீர்: ஐஜிபி

கடந்த ஆண்டு டிசம்பரில் ஆட்டிஸம் சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கொலை தொடர்பில் முழுமையாக விசாரிக்கும் வரை அனைத்து தரப்பினரையும் பொறுமையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஜெய்ன் ரய்யானின் பெற்றோர் வெள்ளிக்கிழமை (மே 31) புஞ்சாக் ஆலத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் வேறு யாரும்  கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் படைத்தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

அவர்கள் (உயிரிழந்தவரின் பெற்றோர்) ஏழு நாட்களுக்கு (சனிக்கிழமை (ஜூன் 1)) காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  சிலாங்கூர் காவல்துறைக்கு நாங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று  Terengganu International Endurance Park in Lembah Bidongஇல் IGP Cup Endurance Horse Riding Championship 2024  பரிசு வழங்கும் விழாவிற்குப் பிறகு (ஜூன் 2) அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பரிசுகளை தெரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் வழங்கினார். டிசம்பர் 6 ஆம் தேதி சிலாங்கூர் டாமன்சரா டமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு ஓடையில் ஜெய்ன் ரய்யான் இறந்து கிடந்தார். ஆறு வயதான Zayn Rayyan டிசம்பர் 5 அன்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது, மேலும் அவரைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட குடியிருப்பாளர்கள் குழுவால் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here