ஒசாமா பின் லேடனின் மகன் பிரான்சிலிருந்து வெளியேற்றம்

பாரிஸ்: அல் காய்தா அமைப்பை நிறுவிய ஒசாமா பின் லேடனின் மகன், பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்

பல ஆண்டுகளாக பிரான்சில் வசித்து வந்த இவர், வடக்குப் பகுதியான நோர்மண்டி கிராமத்தில் நிலப்பரப்புகளுக்கு சாயம் பூசி வந்தார்.

பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதாகக் கருதப்படும் கருத்துகளை சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக, பிரான்ஸ் திரும்ப உமர் பின் லேடனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உமர் மீண்டும் பிரான்ஸ் செல்ல தடை உத்தரவில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ தெரிவித்தார். பிரான்சிலிருந்து உமர் எப்போது வெளியேற்றப்பட்டார், அங்கிருந்து எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டார் என்பன குறித்த விவரங்களை அமைச்சர் பகிரவில்லை.

“பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவரின் வாழ்க்கைத்துணையாக ஓர்ன் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த உமர், பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தும் கருத்துகளை 2023ல் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்,” என்று அமைச்சர் ரீடெய்லியோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“எந்தவொரு காரணத்துக்காகவும் உமர் பிரான்ஸ் திரும்ப முடியாததை இந்தத் தடை உறுதிசெய்யும்,” என்றும் அவர் சொன்னார்.

இதுகுறித்து கருத்து பெற உமரை தொடர்புகொள்ள முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here