தெலுக் இந்தான் அணிவகுப்பில் பிற நாடுகளின் கொடிகள் அசைக்கப்பட்டபோது, ​​சீனா கொடியை மட்டும் விமர்சிப்பதா?

பேராக், தெலுக் இந்தானில் நடைபெற்ற அணிவகுப்புக்கு, பிற நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டபோது, ​​சீனாவின் கொடியை மட்டும் அசைப்பதை மையமாக வைத்து விமர்சனம் செய்வது ஏன் என்று எம்சிஏ துணைத் தலைவர் டான் டீக் செங் கேள்வி எழுப்பியுள்ளார். தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் தெலுக் இந்தானில் சமீபத்தில் நடந்த அனைத்துலக குவான் கோங் கலாச்சார விழாவில் கலந்துகொண்டதாக டான் கூறினார்.

அன்றைய தினம் அணிவகுப்பில் சுமார் 400 பார்வையாளர்கள் கலந்துகொண்டதாகவும், அவர்களில் சுமார் 200 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் போலீஸ் விசாரணைகள் வெளிப்படுத்தின. நிகழ்ச்சியில் தாய்லாந்து மற்றும் வியட்நாம் கொடிகளை அசைப்பவர்களும் இருந்தனர். ஆனால் சீனக் கொடிகளை அசைப்பது மட்டுமே ஒரு பிரச்சினையாக மாறியது  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

அக்டோபர் 24 அன்று கோயில் திருவிழா மற்றும் அணிவகுப்பின் போது தெலுக் இந்தானில் உள்ள சாய்ந்த கோபுரத்தின் அருகே ஒரு குழு சீனக் கொடியை அசைப்பதைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதை அடுத்து சர்ச்சை எழுந்தது. Guan Gong Cultural Association தலைவர் Soon Boon Hua, இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியதோடு, சீனக் கொடிகள் சீனாவிலிருந்து வந்த பிரதிநிதிகளால் அசைக்கப்பட்டதாகக் கூறினார். இது ஏற்பாட்டாளர்களால் திட்டமிடப்படவில்லை என்றார்.

சில அரசியல்வாதிகள் இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டதாகவும், மலிவான அரசியல் லாபத்தை பெறுவதற்கு குறுக்கு  வழியை பயன்படுத்துவதாகவும், அதன் மூலம் சீனாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான நட்புறவு ஆபத்தில் இருப்பதாக டான் குற்றம் சாட்டினார். இந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து முரண்பாடுகளை விதைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். இது நமது பன்முக கலாச்சார சமூகத்தில் பதற்றம் மற்றும் அச்சத்தின் சூழ்நிலையை உருவாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here