மேற்கு கரையில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 6 பேர் பலி

ரமல்லா,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது.அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின்

அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் சில பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், பாப்புலர் பிரண்ட் பார் ஆப் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு கரையில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்களும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு கரையின் ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெனின் நகரில் செயல்பட்டு வந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 6 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட 6 பேரில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஜெனின் நகர் பிரிவு முக்கிய தளபதியும் அடக்கம் என தெரியவந்துள்ளது. சுமார் 2 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக மேற்கு கரையில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை நிர்வகித்து வரும் அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு படைகளும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஜெனின் பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினரை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here