3ஆம் படிவ மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் கைது

கிளந்தான், பாசீர் மாஸில் நேற்று ஒரு பள்ளியில் 3 ஆம் படிவ மாணவனை அடித்ததாக ஆறு மாணவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். காலை 10 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் தனது மருமகன் அறைந்து தாக்கப்பட்டதாகவும், அவரது கால்சட்டை கிழிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவரின் அத்தை ஒரு பேஸ்புக் பதிவில் கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்திருக்கிறது.

அந்தப் பகுதியைக் கடந்து சென்ற ஒரு ஆசிரியர் கவனிக்கும் முன்பே அவர்கள் அவரின் கழுத்தை நெரித்ததாகவும் அவர் கூறினார். ஆசிரியர் கடந்து செல்லவில்லை என்றால், என் மருமகன் ஒரு கொடுமைக்காரனின் கைகளில் இறந்திருக்கலாம் என்று அவர் கூறினார். மேலும், புகார் அளிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, அவர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.  16 வயதுடைய ஆறு சிறுவர்களின் கைதினை பாசீர் மாஸ் காவல்துறைத் தலைவர் காமா அசுரல் முகமது உறுதிப்படுத்தினார். இன்று காலை அவர்களைக் காவலில் வைக்க போலீசார் விண்ணப்பித்ததாகக் கூறினார். இந்த விஷயம் குறித்து போலீசார் பின்னர் அறிக்கை வெளியிடுவார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here