மக்களவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள நஜிப் துன் ரசாக்கின் கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்ததாக முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நஜிப்பின் சட்டக் குழு கடந்த வாரம் இந்த விவகாரம் குறித்து துறைக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் “பாதுகாப்பு” என்ற அடிப்படையில் கோரிக்கையை நிராகரித்ததாகவும் ஷஃபி செய்தியாளர்களிடம் கூறினார்.









