மலேசிய இந்து சங்கத்தின் 45ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த 24.7.2022 அன்று நடைபெற்றது செல்லத்தக்கது. அன்று நடைபெற்ற 1ஆவது மத்திய செயலவை கூட்டம் செல்லுபடியாகும்.
அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 4ஆவது பிரதிவாதியான டத்தோ மோகன் ஷானின் வாய்மொழி ராஜினாமா செல்லுபடியாகும்.
அதனால் கணேசன் தரப்பிலான இந்து சங்கத்தினரை தலைமையகத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசிய இந்து சங்கத்தின் உண்மையான தலைவராக கணேசன் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.







