உங்கள் எண்ணங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்- கைரி ரஃபிஸியிடம் கூறுகிறார்

பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் சமீபத்திய கருத்துக்களின் படி மலேசியர்களின் வெளியில் உணவருந்தும் “அடிமையாதல் குணத்தால்”  அவர்களின்  வருமானத்தை இழக்கின்றனர் என்ற கருத்து தேவையற்றது என்கிறார் கைரி ஜமாலுதீன். ரஃபிஸி போன்ற அமைச்சர்களிடம் இருந்து தீர்வுகளை கேட்க மக்கள் ஏங்குகின்றனர். பிரச்சினைகளுக்கு காரணம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.

சாப்பிடும் கலாச்சாரம் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ரஃபிஸியின் முயற்சி பாராட்டத்தக்கது என்று கைரி ஒப்புக்கொண்டார். ஆனால் அது மக்கள் மீது எதிர் விளைவை ஏற்படுத்தியது என்றார்.

பொதுமக்கள் உங்கள் சிந்தனை செயல்முறையை அறிய விரும்பவில்லை. ஆனால் அவர்கள் உங்கள் முடிவை (தீர்வுகள்) அறிய விரும்புகிறார்கள். நீங்கள் உங்கள் முடிவை எடுத்த பிறகு, நீங்கள் விளக்கலாம் என்று அவர் ஷாரில் Keluar Sekejap podcast நிகழ்வில் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மலேசியாகினி ரஃபிஸியை மேற்கோள் காட்டி, மலேசியர்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை வெளியில் சாப்பிடுவதற்குச் செலவிடுகிறார்கள் என்றும், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு “அடிமையாக” இருப்பதாகவும் கூறினார். இதற்கு மக்கள் மீது குற்றம் சுமத்த முடியாது என்றும், கடந்த கால கொள்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஊதிய அமைப்பு ஆகியவற்றின் மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here