லாஸ் ஏஞ்சல்ஸ்,ஆக.13-அமெரிக்காவில் நடைபெற்ற அனைத்துலக குறும்பட விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிக்கு குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. திருப்பூர் அருகே அங்கேரி பாளையத்தைச் சேர்ந்தவர் பியூ கிருஷ்ணன். அவரது மகள் பேபி ஸ்வேதா தனியார் பள்ளியில் நாலாம் வகுப்பு படித்து வருகிறார்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ‘நான் யாரிடமும் சொல்ல வேண்டும்’ என்ற பெயரில் எடுத்த பத்து நிமிட குறும்படத்தில் பேபி மகா ஸ்வேதா நடித்திருக்கிறார். இந்த குறும்படம் கடந்த 2ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற அனைத்துலக குறும்பட விழா வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
விருதுகளுக்காக 60 நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .சிறுமி பேபி மகா ஸ்வேதா நடித்த குறும்படம் விருதை பெற்றுள்ளது.
அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை கிருஷ்ணன் பேசும்போது 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்த விருது என் மகளுக்கு கிடைத்தது. படத்தை தயாரிக்க தனது மூன்றாண்டு சிறுசேமிப்பு பணத்தையெல்லாம் அவர் செலவிட்டுள்ளார். அவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.